Jul 18, 2007

காதல் பசி

ஒரு பின்பனிக்கால அதிகாலையில்
நம் படுக்கையறை.
குளித்து முடித்த உன் ஈரக்கூந்தல்
வாசம் கேட்டு விழித்தது என் மூளை.

இமைகள் திறந்தபோது
பார்வையில் விரிந்தது உன் பூ முகம்.

வெடித்த உதடுகள் மோகப்பார்வை வீசின.
சிரித்த கண்கள் கவிதை பேசின.

உன் அடர் கானகக் கூந்தல் உதிர்த்த ஒற்றைத்துளி
பட்டுச் சிலிர்த்தது என் மூளை.

நீ புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தபோது
என் மூளைக்குப் பசிக்கத் தொடங்கியது.