May 30, 2007

ஒன்றுமில்லாதது

அந்த அறைக்குள் வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.
என்னுடன் தனிமை துணையாக!

அசைந்துகொண்டிருந்த சட்டையின் நிழலை
வெறித்தது கண்கள்.

நினைவுகளும் கசிந்தன.

கண்கள்மூடி திறந்தபோது
அதற்கு முந்தைய கணங்கள்
என் நினைவில் இல்லை!

வெறுமையின் சூழல்
எப்போதும் புரிவதில்லை யாருக்கும்!

No comments:

Post a Comment