
இலக்கணங்கள் இல்லாமற்போன ஒருநாளின்
முன் இரவில் நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கியதால்!
பின் இரவில் நான் என்னையே காதலிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் அப்போது நான் இந்த உலகத்தையே காதலித்தேன்!
காரணங்கள் எதுவும் இல்லாமல்;
உனக்கு அழத்தோன்றிய கணங்களில்
உன் கண்களின் வழியே வழிந்தது காதல்.
இமைக்க மறந்து சில சமயம், பிரக்ஞை-அற்று, ...
நீ அருகில் இல்லாத ஒரு மழை நாளில்;
எனக்கான உன் வாசலில் நின்றுகொண்டு சிரித்தன
உன் சிரிப்பின் மிச்சங்கள்.
உண்மையில் காதல் இரக்கமற்ற-தாக இருக்கலாம்.
Cool...!
ReplyDelete