Nov 22, 2007

கசிவு

மலரிலிருந்து விழுந்த மழைத்துளி
கண்ணம் தொடும்போது;

வாடைக்காற்றின் ஈரம்
நாசிவழி நகரும்போது;

மழைக்காற்றின் வேகம்கூடி
காதுமடல் சில்லிடும்போது;

மழை நின்றுவிட்ட சாலையை காணும்போது;

தொலைவில் ஒலிக்கும்
ஏகாந்த இசையை கேட்கும்போது;

மனம் தொலைந்துவிட விரும்பும்போது;

கண்களுள்ள இடத்தில் உன் உதடுகளை
பொருத்திக்கொள்கிறேன்.

மழை வரும்போதெல்லாம்
உனை வந்து சேர்வேன்.

1 comment: