மலரிலிருந்து விழுந்த மழைத்துளி
கண்ணம் தொடும்போது;
வாடைக்காற்றின் ஈரம்
நாசிவழி நகரும்போது;
மழைக்காற்றின் வேகம்கூடி
காதுமடல் சில்லிடும்போது;
மழை நின்றுவிட்ட சாலையை காணும்போது;
தொலைவில் ஒலிக்கும்
ஏகாந்த இசையை கேட்கும்போது;
மனம் தொலைந்துவிட விரும்பும்போது;
கண்களுள்ள இடத்தில் உன் உதடுகளை
பொருத்திக்கொள்கிறேன்.
மழை வரும்போதெல்லாம்
உனை வந்து சேர்வேன்.
Nov 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
ok, fine.
ReplyDelete